Velmurugan s | Published: Mar 18, 2025, 11:00 PM IST
உலகப் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதுவும் கார்த்திகை மாதம் வந்துவிட்டால் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவித்து பக்தர்கள் விரதத்தை துவக்குவது வழக்கம். குறிப்பாக ஆண்டு தோறும் தை மாதம் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்தார். 50 வருடக் கனவு நிறைவேறியதாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.