Viral :  பள்ளி மாணவர்களுக்கு மயக்க மாத்திரை விற்பனை! ஒருவர் கைது, 104 மாத்திரைகள் பறிமுதல்!

Viral : பள்ளி மாணவர்களுக்கு மயக்க மாத்திரை விற்பனை! ஒருவர் கைது, 104 மாத்திரைகள் பறிமுதல்!

Published : Aug 03, 2022, 07:06 PM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு மயக்க மாத்திரைகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 104 மாத்திரைகள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 

அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் சொக்கலிங்கபுரம் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியான வகையில் நின்று கொண்டிருந்த நபரை போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதையடுத்து அவரை மடக்கி பிடித்து விசாரித்தில் அவர் மதுரையைச் சேர்ந்த தீபக்ராஜ் என்பதும் தற்போது அருப்புக்கோட்டை நெசவாளர் காலணியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அவர் பள்ளி மாணவர்களுக்கு மயக்க மாத்திரைகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து 104 மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் தீபக்ராஜையும் கைது செய்தனர். பள்ளி மாணவர்களுக்கு மயக்க நிலையில் வைத்திருக்க கூடிய மாத்திரைகளை விற்பனை செய்ததாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி