சவுக்கு சங்கர் வழக்கு.. குற்றம்சாட்டப்பட்ட பெலிக்ஸ் - விசாரணைக்கு பின் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்!

சவுக்கு சங்கர் வழக்கு.. குற்றம்சாட்டப்பட்ட பெலிக்ஸ் - விசாரணைக்கு பின் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்!

Ansgar R |  
Published : May 21, 2024, 11:36 PM IST

Felix Gerald : பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரும், அந்த காணொளியை ஒளிபரப்பிய நிறுவனத்தின் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.

பெலிக்ஸ் ஜெரால்டின் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது (பெண்) காவலர்களை தரக்குறைவாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது முசிறி டிஎஸ்பி எம்.ஏ.யாஸ்மின் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் திரு.பெலிக்சை கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் இரண்டாவது குற்றவாளியாகக் கருதப்படுகிறார்.

தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களை அவதூறு பேசியதாக சவுக்குசங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேனியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டு சிறை அடைக்கப்பட்டார். 

மேலும் சவுக்குசங்கரின் அந்த நேர்காணலை ஒளிபரப்பு செய்த redpix ஆசிரியர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர்  
வீரமணி தலைமையிலான காவல்துறையினர் டெல்லியில் 10ம் தேதி இரவு பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்தனர். 

தொடர்ந்து அவரை 13ம் தேதி  திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அவர் திருச்சி கூடுதல் மகிளா  நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்பு அஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து 27.5.24 வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டார் நீதிபதி.

மேலும் நீதிபதி கைதான பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் காவல்துறையினர் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். மீண்டும் இன்று மாலை 3 மணி அளவில் அவரை நேரில் ஆஜர் படுத்த உத்தரவிட்டார்.
ஒரு நாள் விசாரணை முடிந்த பின்னர் இன்று மதியம் திருச்சி அரசு மருத்துவமனையில்  மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

நீதிபதியிடம் காவல்துறையில் விசாரணையில் இருந்த பொழுது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக இரு தரப்பினரும் தெரிவித்தனர். இதனையடுத்து ஏற்கனவே 27ம் தேதி வரை விதிக்கப்பட்ட நீதிமன்ற காவலின்படி அவர் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி
Read more