FISH SALE : ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன்.! மீன் வியாபாரியின் அசத்தல் அறிவிப்பால் திணறிய மதுரை

FISH SALE : ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன்.! மீன் வியாபாரியின் அசத்தல் அறிவிப்பால் திணறிய மதுரை

Published : Jun 23, 2024, 02:37 PM IST

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 10பைசாவிற்கு பிரியாணி, ஒரு ரூபாய்க்கு பிரியாணி என விளம்பரம் செய்வார்கள் தற்போது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன் என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளார். 

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன்

மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள யானைமலை ஒத்தக்கடையில் மன்னர் வளைகுடா என்ற பெயரில் மீன் கடை உள்ளது. இந்த மீன் கடையை வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த மீன் கடை தொடங்கி 3 ஆண்டுகளையொட்டி வாடிக்கையாளர்களுக்கு புதிய இலவச அறிவிப்பை வெளியிட்டார். அதன் படி, இந்த மீன் கடையில் ஒரு கிலோ மீன் வாங்கும் ஒரு நபருக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன் இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக அந்த பகுதி முழுவதும் போஸ்டரையும் ஒட்டினார். 

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ பிரியர்கள் இறைச்சிக்கடைகளில் கூடுவார்கள். அசைவ பிரியர்கள் அதிகமாக இருக்கக்கூடிய மதுரையில் இந்த அறிவிப்பை கேட்டவுடன் சும்மாவா ??இருப்பார்கள் காலை 7 மணி முதல் 8 மணிக்குள்ளாகவே 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மீன் கடை முன்பு குவிந்து வரிசையில் நின்ற மீன்களை வாங்கி சென்றனர்.  சமீப காலமாக தங்களது வியாபார யுக்தியை உரிமையாளர்கள் பல்வேறு விதமாக கையாண்டு வரக்கூடிய வேலையில் மதுரையைச் சேர்ந்த இந்த வழக்கறிஞர் ஒரு கிலோ மீன் வாங்கினால் ஒரு கிலோ மீன் இலவசம் என்று ஆஃபர் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி
Read more