2011ல் எம்எல்ஏக்கள் செய்த துரோகம் தான் கேப்டனின் உடல்நிலை மோசமாவதற்கு காரணம் - பிரேமலதா ஆதங்கம்

Published : Dec 16, 2023, 04:52 PM IST

2011ல் கேப்டன் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது சொந்த கட்சி எம்எல்ஏக்கள் செய்த துரோகம் தான் கேப்டனின் தற்போதைய உடல்நிலைக்கு காரணம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கேப்டன் விஜயகாந்தை திருமணம் செய்துகொண்ட நாளில் இருந்து அவருடன் உருதுணையாக இருந்து சினிமா, அரசியல் என அனைத்து தளங்களிலும் அவருடன் பயணித்து உள்ளேன். தற்போது பொதுச்செயலாளர் என்ற மிகப்பெரிய பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் அரசியலில் பெண்கள் சந்திக்கின்ற சவால்கள் ஏராளம். அதற்கு ஒரே ஒரு உதாரணம் புரட்சித் தலைவி ஜெயலலிதா. கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தொண்டர்களுக்கு அன்னியாகவும், அன்னையாகவும் இருந்து நான் பணியாற்றி வருகிறேன். ஆரம்ப காலத்தில் யாருடனும் கூட்டணி கிடையாது என்ற நிலைப்பாட்டில் தேமுதிக இருந்தபோது தொடர்ந்து முன்னேற்றத்தை சந்தித்தது.

2011ல் கூட்டணி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆனால், அடுத்த 3 மாதங்களில் தேமுதிக எம்எல்ஏக்கள் செய்த துரோகம் தான் கட்சிக்கும், கேப்டனின் உடல் நிலைக்கும் சறுக்கலாக அமைந்தது என குறிப்பிட்டுள்ளார்.

03:49ஒன்னாம் நம்பர் துரோகி எடப்பாடி ! மன்னார்குடியில் எடப்பாடி பழனிசாமியை வெளுத்து வாங்கிய உதயநிதி !
02:53விஜய்க்கு நோ கமெண்ட்ஸ் ...ஆதவ் அர்ஜுனா நியூஸ் எல்லாம் படிப்பதில்லை ! முதல்வர் ஸ்டாலின் Thug ரிப்ளை!
02:45பரமக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் நடைப்பயணம்! மக்களுடன் கலந்துரையாடல் | MK Stalin
05:47பாஜக பிரச்சனையை
03:32குடும்பத்தினருக்கு மட்டுமே பதவியா? எதிர்க்கட்சிகளை வெளுத்து வாங்கிய சரத்குமார்
03:12பதநீர் இறக்கியவரை சுடச்சொன்னது யார்?! இந்த ஆட்சியை நாம் டிஸ்மிஸ் செய்வோம்.!
03:39எலி பொறியில் மாட்டி விட்டது.! திமுகவை வேண்டாம் என உதறிதள்ளும் பொதுமக்கள்.!
04:03திமுக ஆட்சிகாலத்தில் மட்டுமே மிகப்பெரிய ஊழல் நடந்தது.! பாயிண்டாக பேசி கைத்தட்டல் வாங்கிய குஷ்பு
03:50தேநீர் இடைவேளை.! டீக்கடை பெஞ்சில் முதலமைச்சர்.!
03:43"நமக்கு போட்டியே இல்லை.! திமுக தோற்பது உறுதி.! புகார் குடுத்தால் உங்களுக்குதான் ஜெயில்.!
Read more