இன்றைக்கு ஏற்பட்டு வருகின்ற எந்த அரசியல் மாற்றமும் எடப்பாடி பழனிச்சாமி கரங்களை வலுப்படுத்தும் வகையில்தான் நடந்து வருகிறது. முதல்வர், ஒபிஎஸ் சந்திப்பு வாயிலாக, இருட்டில் இருந்த உறவு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திமுக.,வுடன் ஒபிஎஸ் எவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்பதற்கு சட்டசபையில் அவர் பேசிய பேச்சுக்களே சாட்சி. தினந்தோறும் லாக்கப் டெத்கள், பாலியல் பலாத்காரங்களை தொடர்ந்து வனத்துறையிலும் தற்போது தவறுகள் நடக்க ஆரம்பித்துள்ளன.