நீலகிரி : நிரம்பி வழியும் அணைகள்! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீலகிரி : நிரம்பி வழியும் அணைகள்! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Published : Jul 15, 2022, 02:04 PM IST

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குந்தா, பில்லூர், சாண்டி நல்லா மூன்று அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி முதல் 800 கனஅடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 13 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக உதகை குந்தா கூடலூர் பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு பகலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளான குந்தா, பைக்காரா, அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்ட் கெத்தை, பார்சன்ஸ்வேலி, மாயார் உள்ளிட்ட அனைத்து அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டி வருகிறது.

இந்நிலையில் குந்தா, கெத்தை, பில்லூர், சாண்டி நல்லா உள்ளிட்ட அணைகளில் இரண்டாவது நாளாக நீர் முழு கொள்ளளவை எட்டியதால் தற்போது அணைக்கு வினாடிக்கு 500 முதல் 800 கன அடி நீர் வந்த வண்ணம் உள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

02:54த.வெ.க சார்பில் தை திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி சிறபித்தனர்
02:15தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்
03:29வரும் 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:19தஞ்சையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்ற சுற்றலாப் பொங்கல் திருவிழா ! வைரல் வீடியோ
05:02சென்னை சங்கமம் கிராமிய கலை நிகழ்வுகளுடன் தொடக்கம் ! திமுக எம்.பி.கனிமொழி பேட்டி
02:15எத்தனை பேர் சேர்ந்து வந்தாலும் திமுகவை வெல்ல முடியாது 2026ல் திமுக வெற்றி பெறப்போவது உறுதி
03:43தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது...! அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு
05:51மக்களுக்கு தெரியாமல் அரசு மதுபான கடை அரசுக்கு எச்சரிக்கை பொதுமக்கள் போராட்டம்
05:292026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வெற்றிபெறும் - வானதி சீனிவாசன் பேட்டி
04:29உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இதுவரை பத்தாயிரம் முகாம்களில் நடத்தப்பட்டிருக்கிறது - மா சுப்பிரமணியன் !