நீலகிரி : நிரம்பி வழியும் அணைகள்! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீலகிரி : நிரம்பி வழியும் அணைகள்! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Published : Jul 15, 2022, 02:04 PM IST

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குந்தா, பில்லூர், சாண்டி நல்லா மூன்று அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி முதல் 800 கனஅடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 13 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக உதகை குந்தா கூடலூர் பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு பகலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளான குந்தா, பைக்காரா, அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்ட் கெத்தை, பார்சன்ஸ்வேலி, மாயார் உள்ளிட்ட அனைத்து அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டி வருகிறது.

இந்நிலையில் குந்தா, கெத்தை, பில்லூர், சாண்டி நல்லா உள்ளிட்ட அணைகளில் இரண்டாவது நாளாக நீர் முழு கொள்ளளவை எட்டியதால் தற்போது அணைக்கு வினாடிக்கு 500 முதல் 800 கன அடி நீர் வந்த வண்ணம் உள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

07:48பேரவையில் பிரேமலதா விளாசல்: விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாத அரசுக்கு கண்டனம்!
03:40மேகதாட்டு விவகாரத்தில் அரசின் மெத்தனப் போக்கைக் கடுமையாகத் தாக்கிய பிரேமலதா விஜயகாந்த் !
01:48TN Budget: சட்டப்பேரவை பட்ஜெட் குறித்து அதிமுக எம்.எல்.ஏ சி.வி. சண்முகம் கடுமையான விமர்சனம்!
01:51டெல்லியில் கனமழை: சைனிக் ஃபார்ம்ஸ் பகுதியில் வெள்ளத்தில் தவிக்கும் வாகன ஓட்டிகள்!
06:53பழங்குடியினர் வெளியேற்றத்திற்கு எதிர்ப்பு ! தேனியில் கம்யூனிஸ்ட் கட்சி வீதிப்போராட்டம் !
03:48தூத்துக்குடி பனிமய மாதா கோயில் திருவிழா நிறைவு: திரளான பக்தர்கள் தரிசனம்!
01:49நம்பர் 1 டிரெண்டிங்கில் 'தக்காளி வெற்றி கழகம்' பஸ்! யார் பாத்த வேலைடா இது?
08:28நெல் சேமிப்புக் கிடங்குகள் தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லாததை கண்டிக்கிறோம் - பிரேமலதா பேட்டி
04:38காவிரி விவகாரம் | அனைத்து கட்சி கூட்டம் மூலம் எந்த முடிவும் எட்டப்படாது ! நிர்மல் குமார் பேட்டி
03:59பட்ஜெட் என்ற பெயரில் ஏமாற்று வேலை ! எதிர்கால திட்டமே இல்லாத பட்ஜெட் ! – நயினார் நாகேந்திரன் பேட்டி