
திமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதி வாரிய துறையின் அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தபோது பல்வேறு முறைகேடு நடந்ததாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை, சொத்துக்குவிப்பு வழக்கு மற்றும் அப்போதைய உளவுத் துறை காவலர் ஜாபர் சேட்டுக்கு வீட்டு வசதி வாரியத்தில் இட ஒதுக்கீடு செய்தது போன்ற பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது.