
Vaiko removes Mallai Sathya from MDMK : மதிமுகவில் மீண்டும் உட்கட்சி மோதல் தலை தூக்கியுள்ளது. தற்போது மதிமுக பொதுச்செயலாளராக உள்ள வைகோவிற்கும், துணை பொதுச்செயலாளராக உள்ள மல்லை சத்யாவிற்கும் இடையே ஏற்படுள்ள மோதலால் கட்சியில் இருந்து மல்லை சத்யா நீக்கப்பட்டுள்ளார். வைகோவின் மகனான துரை வைகோ 2019 ஆம் ஆண்டு முதல் மதிமுகவில் முதன்மைச் செயலாளராக முக்கிய பொறுப்பு வகிக்கத் தொடங்கினார். இது கட்சியில் வாரிசு அரசியல் குற்றச்சாட்டுகளை எழுப்பியது, குறிப்பாக மல்லை சத்யா மற்றும் துரை வைகோ ஆதரவாளர்களிடையே மோதலை அதிகரித்தது.