Vanathi Srinivasan : 2047லில் வளர்ந்த இந்தியா.. அதுவே நம் பிரதமரின் கனவு - கரூரில் பேசிய வானதி ஸ்ரீனிவாசன்!

Vanathi Srinivasan : 2047லில் வளர்ந்த இந்தியா.. அதுவே நம் பிரதமரின் கனவு - கரூரில் பேசிய வானதி ஸ்ரீனிவாசன்!

Ansgar R |  
Published : Apr 14, 2024, 09:51 PM IST

Vanathi Srinivasan : ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கரூரில் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பரப்புரை மேற்கொண்டார்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுசாமிபுரம் பகுதியில் கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பேசி அவர் "நாட்டில் உள்ள இளைஞர்கள் சொந்தமாக சம்பாரித்து சொந்த காலில் நிற்க பிரதமர் நினைக்கிறார்".

2047 ம் ஆண்டு வரும் போது ஒரு வளர்ச்சி அடைந்த இந்தியாவை பார்க்கனும் என்று பிரதமர் நினைக்கிறார், இந்தியா என்று சொன்னால் வெளிநாட்டில் மோடி நாட்டில் இருந்து வருகிறீர்களா? என்று கேட்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் பிரதமர் தன் நாட்டு மக்கள் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டு உள்ளார் என்று வெளிநாட்டில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். 

10 வருஷமாக மக்களுக்காக உழைத்து கொண்டு பிரதமர் மூன்றாவது முறையாக அவர் தான் பிரதமர் ஆகப்போகிறார். அதனால் கரூர் பாஜக வேட்பாளர் செந்த்நாதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். எங்களுக்கு கரூர் என்றாலே ஒரு பயம், கரூர்காரங்களை பார்த்தால் தமிழ்நாடே பயந்து கொண்டு இருக்கிறது. ஒரு தம்பி கோவையில் போட்டியிடுகிறார், அது போல் கரூரில் போட்டியிடும் செந்தில்நாதனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி
Read more