Vanathi Srinivasan : 2047லில் வளர்ந்த இந்தியா.. அதுவே நம் பிரதமரின் கனவு - கரூரில் பேசிய வானதி ஸ்ரீனிவாசன்!

Vanathi Srinivasan : 2047லில் வளர்ந்த இந்தியா.. அதுவே நம் பிரதமரின் கனவு - கரூரில் பேசிய வானதி ஸ்ரீனிவாசன்!

Ansgar R |  
Published : Apr 14, 2024, 09:51 PM IST

Vanathi Srinivasan : ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கரூரில் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பரப்புரை மேற்கொண்டார்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுசாமிபுரம் பகுதியில் கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பேசி அவர் "நாட்டில் உள்ள இளைஞர்கள் சொந்தமாக சம்பாரித்து சொந்த காலில் நிற்க பிரதமர் நினைக்கிறார்".

2047 ம் ஆண்டு வரும் போது ஒரு வளர்ச்சி அடைந்த இந்தியாவை பார்க்கனும் என்று பிரதமர் நினைக்கிறார், இந்தியா என்று சொன்னால் வெளிநாட்டில் மோடி நாட்டில் இருந்து வருகிறீர்களா? என்று கேட்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் பிரதமர் தன் நாட்டு மக்கள் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டு உள்ளார் என்று வெளிநாட்டில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். 

10 வருஷமாக மக்களுக்காக உழைத்து கொண்டு பிரதமர் மூன்றாவது முறையாக அவர் தான் பிரதமர் ஆகப்போகிறார். அதனால் கரூர் பாஜக வேட்பாளர் செந்த்நாதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். எங்களுக்கு கரூர் என்றாலே ஒரு பயம், கரூர்காரங்களை பார்த்தால் தமிழ்நாடே பயந்து கொண்டு இருக்கிறது. ஒரு தம்பி கோவையில் போட்டியிடுகிறார், அது போல் கரூரில் போட்டியிடும் செந்தில்நாதனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

03:02செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
04:38தலைவர் விஜய் குறித்து அனைவரும் கருத்து சொல்வதற்கு காரணம் தோல்வி பயம் ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:33எடப்பாடி பழனிச்சாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் - அமைச்சர் ரகுபதி பேட்டி.
04:35சேகர்பாபு போல நான் அண்டிப்பிழைக்கும் ஆண்டி அல்ல.. ரவுடி போல சேகர்பாபு இருக்கிறார் - அண்ணாமலை பேட்டி
04:14நாட்டின் நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை...இவரை வைத்து என்ன செய்வது..? இபிஎஸ் பேட்டி
03:28கூட்டணி பேச்சுவார்த்தை காங்கிரஸ்யிடம் நடந்து வருகிறது தொகுதி எண்ணிக்கை குறித்து பேசவில்லை - கனிமொழி
03:05அண்ணா மற்றும் திராவிடத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை ! வைகோ பேட்டி
02:32கோயில் அருகே சுடுகாடு மற்றும்பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் எச்சரிக்கை
04:50விஜய்யின் இன்ஜினில் ஆயில் இல்லை...எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது ! அண்ணாமலை அதிரடி பேட்டி
02:03விஜய்க்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒற்றை எண்ணம் மட்டும் தான் ! டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
Read more