நாடாளுமன்ற தேர்தல் 2024 - தன் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபல நடிகர் கெளதம் கார்த்தி!

Apr 19, 2024, 8:43 AM IST

இன்று ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக இன்று துவங்கும் இந்த வாக்குப்பதிவானது, ஜூன் மாதம் 1ம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. அதன் பிறகு ஜூன் மாதம் 4ம் தேதி வாக்குப்பதிவு என்னப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில் காலை 7:00 மணி முதல் மக்கள் பெருந்திரளாக கூடி தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்களும் தங்களுடைய வாக்குகளை தற்பொழுது செலுத்தி வருகின்றனர். 

அதே போல பிரபல நடிகர் கௌதம் கார்த்தி அவர்களும் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அவரது தந்தை நவரச நாயகன் கார்த்தி இந்த முறை அதிமுகவிற்கு சேகரித்து குறிப்பிடத்தக்கது.