Watch : தென்காசியில் தொடரும் கனமழை! நிரம்பி வழியும் அணைகள்!

Watch : தென்காசியில் தொடரும் கனமழை! நிரம்பி வழியும் அணைகள்!

Published : Aug 02, 2022, 11:04 PM IST

தென்காசி மாவட்டம், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. குண்டாறு அணை முழு கொள்ளவை எட்டிய நிலையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
 

பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது, தொடர் மழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் உள்ளிட்ட அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகளில் அளவுக்கு அதிகமான தண்ணீர் வந்து கொண்டிருக்கும் சூழலில், தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான கடனாநதி, கருப்பாநதி, அடவிநயினார், குண்டாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை அடவிநயினார்கோயில் நீர்த்தேக்கத்திற்கு சுமார் 143 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, நேற்று 89 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்த்து, 95 கன அடியாக உள்ளது. அதேபோல் கடனாநதி பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக அணைக்கு 60 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் சூழலில், அணையின் நீர்மட்டமானது தற்போது 85 கன அடியாக உயர்ந்துள்ளது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் தற்போது 47.90 கன அடியாகவும், குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36.10 கன அடியையும் எட்டியு நிரம்பியுள்ளது . மேற்கண்ட அணைகளில் இருந்து தற்போது கார் சாகுபடி விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

05:39இந்தியாவிலேயே சூப்பர் முதலமைச்சர்.. திமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது
03:54ராமதாஸ் தான் தலைவர்... அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அல்ல - பாமக சட்ட ஆலோசகர்
03:29கிளி ஜோசியம் கேட்டுகிட்டு ஊடகத்தில் பதிவிடுவது போல போடுகிறார்கள் - நிர்மல் குமார் பேட்டி
02:42விஜய் 2வது முறை CBI அலுவலகத்தில் ஆஜர்… கேள்விகள் என்ன? முழு அப்டேட்
20:24அண்ணாமலை எதிர்த்து.."பிராமணர்" டெபாசிட் கூட வாங்க முடியாது..! இதோ அந்த strategy toolkit !
01:56சிறுவர்களுக்கான இரண்டு நாள் கபடி போட்டி முதல் பரிசை இளம் சிங்கம் அணியினர் கோப்பை தட்டிச் சென்றனர்
03:16ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தை அமாவாசை சிறப்பு பூஜை - ஏராளமான பக்தர்கள் வருகை !
02:14பேருந்துகள் குறைந்த அளவிலே இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி பேருந்தில் இடம் பிடித்து சென்ற அவலம்
03:53இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜீவானந்தம் நினைவுநாளை ஒட்டி மலர் தூவி மரியாதை
03:11காளிங்கராயன் கால்வாயை வெட்டிய காளிங்கராயரின் சிலையை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
Read more