Watch : தென்காசியில் தொடரும் கனமழை! நிரம்பி வழியும் அணைகள்!

Watch : தென்காசியில் தொடரும் கனமழை! நிரம்பி வழியும் அணைகள்!

Published : Aug 02, 2022, 11:04 PM IST

தென்காசி மாவட்டம், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. குண்டாறு அணை முழு கொள்ளவை எட்டிய நிலையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
 

பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது, தொடர் மழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் உள்ளிட்ட அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகளில் அளவுக்கு அதிகமான தண்ணீர் வந்து கொண்டிருக்கும் சூழலில், தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான கடனாநதி, கருப்பாநதி, அடவிநயினார், குண்டாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை அடவிநயினார்கோயில் நீர்த்தேக்கத்திற்கு சுமார் 143 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, நேற்று 89 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்த்து, 95 கன அடியாக உள்ளது. அதேபோல் கடனாநதி பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக அணைக்கு 60 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் சூழலில், அணையின் நீர்மட்டமானது தற்போது 85 கன அடியாக உயர்ந்துள்ளது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் தற்போது 47.90 கன அடியாகவும், குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36.10 கன அடியையும் எட்டியு நிரம்பியுள்ளது . மேற்கண்ட அணைகளில் இருந்து தற்போது கார் சாகுபடி விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

04:38தலைவர் விஜய் குறித்து அனைவரும் கருத்து சொல்வதற்கு காரணம் தோல்வி பயம் ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:33எடப்பாடி பழனிச்சாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் - அமைச்சர் ரகுபதி பேட்டி.
04:35சேகர்பாபு போல நான் அண்டிப்பிழைக்கும் ஆண்டி அல்ல.. ரவுடி போல சேகர்பாபு இருக்கிறார் - அண்ணாமலை பேட்டி
04:14நாட்டின் நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை...இவரை வைத்து என்ன செய்வது..? இபிஎஸ் பேட்டி
03:28கூட்டணி பேச்சுவார்த்தை காங்கிரஸ்யிடம் நடந்து வருகிறது தொகுதி எண்ணிக்கை குறித்து பேசவில்லை - கனிமொழி
03:05அண்ணா மற்றும் திராவிடத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை ! வைகோ பேட்டி
02:32கோயில் அருகே சுடுகாடு மற்றும்பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் எச்சரிக்கை
04:50விஜய்யின் இன்ஜினில் ஆயில் இல்லை...எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது ! அண்ணாமலை அதிரடி பேட்டி
02:03விஜய்க்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒற்றை எண்ணம் மட்டும் தான் ! டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
04:41விஜய் அண்ணா சொன்ன மாதிரி எங்களிடம் மக்கள் கூட்டணி உள்ளது ! நடிகர் சௌந்தரராஜா பேட்டி
Read more