Watch : தென்காசியில் தொடரும் கனமழை! நிரம்பி வழியும் அணைகள்!

Watch : தென்காசியில் தொடரும் கனமழை! நிரம்பி வழியும் அணைகள்!

Published : Aug 02, 2022, 11:04 PM IST

தென்காசி மாவட்டம், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. குண்டாறு அணை முழு கொள்ளவை எட்டிய நிலையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
 

பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது, தொடர் மழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் உள்ளிட்ட அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகளில் அளவுக்கு அதிகமான தண்ணீர் வந்து கொண்டிருக்கும் சூழலில், தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான கடனாநதி, கருப்பாநதி, அடவிநயினார், குண்டாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை அடவிநயினார்கோயில் நீர்த்தேக்கத்திற்கு சுமார் 143 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, நேற்று 89 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்த்து, 95 கன அடியாக உள்ளது. அதேபோல் கடனாநதி பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக அணைக்கு 60 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் சூழலில், அணையின் நீர்மட்டமானது தற்போது 85 கன அடியாக உயர்ந்துள்ளது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் தற்போது 47.90 கன அடியாகவும், குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36.10 கன அடியையும் எட்டியு நிரம்பியுள்ளது . மேற்கண்ட அணைகளில் இருந்து தற்போது கார் சாகுபடி விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி
Read more