EPS vs Sengottaiyan | சபாநாயகரை தனியே சந்தித்தது ஏன்? செங்கோட்டையன் அதிரடி பதில்!

Velmurugan s  | Published: Mar 16, 2025, 1:00 PM IST

செங்கோட்டையன் அளித்த பேட்டியில் சபாநாயகரை, சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பது சாதாரணமானது. இன்று கூட ஏழு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்துள்ளார்கள். சுற்றுச்சூழல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக நான், சபாநாயகரை சந்தித்தேன். சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக கடினம் கொடுத்துள்ளேன். சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் அங்கு வருகை தந்தார். அவரிடம் அந்த கடிதம் கொடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.