Watch : அதிமுக திட்டங்களை ஒவ்வொன்றாக திமுக அரசு ரத்து செய்கிறது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டம்!

Watch : அதிமுக திட்டங்களை ஒவ்வொன்றாக திமுக அரசு ரத்து செய்கிறது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டம்!

Published : Sep 19, 2022, 01:16 PM IST

இரட்டை இலைக்கு ஓட்டு போட்டதற்க்காக திமுக மக்களை வஞ்சித்து வருவதாக மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
 

மதுரை மாவட்டத்தில் அதிமுக ஆட்சி காலகட்டத்தில் நிர்வாக வசதிக்காக உசிலம்பட்டி கல்வி மாவட்டத்திலிருந்து திருமங்கலத்தை வைத்து புதிய கல்வி மாவட்டம் உருவாக்கி மொத்தமாக 4 கல்வி மாவட்டமாக செயல்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 9 ஆம் தேதி தமிழக அரசு உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 2 கல்வி மாவட்டங்களை ரத்து செய்து மேற்க்கண்ட 2 கல்வி மாவட்டங்களை மேலூர் கல்வி மாவட்டத்துடன் இணைந்து அரசானை பிறப்பித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர், ஏறத்தாழ 20 நிமிடங்கள் போராட்டம் நீடித்த நிலையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரை சந்திக்க அழைத்து சென்றனர்.

மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் "அதிமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நிர்வாக வசதிக்காக 52 புதிய கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது, புதிய கல்வி மாவட்டங்களால் மாணவர்களுக்கு 14 வகையான் நலத்திட்ட உதவிகள் விரைவாக வழங்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய இடங்களில் இருந்த 2 கல்வி மாவட்டங்கள் ரத்து செய்யப்பட்டு மேலூர் கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது, தாலிக்கு தங்கம், குடிமராமத்து திட்டம், பச்சிளம் குழந்தைகள் பரிசு பெட்டகம் உள்ளிட்டு அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் ஒவ்வொன்றாக திமுக அரசு ரத்து செய்து வருகிறது.

அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் தொடங்கிய காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சிந்தனையில் உருவானது போது தற்போது திறந்து வைத்து உள்ளார், 58 ஆம் கால்வாயில் தண்ணீரை திறக்காமல் விவசாயிகளை திமுக வஞ்சித்து வருகிறது. இரட்டை இலைக்கு ஒட்டு போட்டதற்க்காக திமுக மக்களை வஞ்சித்து வருகிறது, தமிழக அரசு என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவான அரசாக செயல்பட வேண்டும், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தது போல புதிய கல்வி மாவட்டங்கள் செயல்படவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்" என கூறினார்
 

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி