பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களின் நடனத்தை பார்த்து கதறி அழுத நீலகிரி ஆட்சியர்

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களின் நடனத்தை பார்த்து கதறி அழுத நீலகிரி ஆட்சியர்

Published : Oct 11, 2023, 11:56 AM IST

நீலகிரியில் முதியோர் இல்லம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் முதியவர்கள் நடனமாடியதை பார்த்து தேம்பி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இயங்கி வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா முதியோர் இல்லத்திற்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர்  அமுதா நேற்று வருகை புரிந்துள்ளார். நூறு வயதிற்கு மேற்பட்ட முதியோர்களை பார்வையிட்டு ஆட்சியர் புத்தாடை வழங்கி சிறப்பித்தார். பின்னர் அனைவரிடமும் ஆசியும் பெற்றார். 

இதனைத் தொடர்ந்து முதியோர் இல்லத்தில் ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவை வாங்க முடியுமா என்ற பாடலுக்கு முதியவர்கள் நடனம் ஆடினர். இதனை பார்த்துக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு தேம்பி அழுதார்.

இதனைத் தொடர்ந்து முதியவர்கள் கூறுகையில், எங்கள் வீட்டில் இருந்தால் இதுபோன்ற சந்தோசங்கள் கிடைக்குமா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் இங்கு நாங்கள் சுதந்திரமாகவும், எங்கள் விருப்பப்படி சந்தோஷமாக வாழ்கின்றோம் எனறும், எங்களை தேடி ஆட்சியர் வந்ததற்கு மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

07:48பேரவையில் பிரேமலதா விளாசல்: விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாத அரசுக்கு கண்டனம்!
03:40மேகதாட்டு விவகாரத்தில் அரசின் மெத்தனப் போக்கைக் கடுமையாகத் தாக்கிய பிரேமலதா விஜயகாந்த் !
01:48TN Budget: சட்டப்பேரவை பட்ஜெட் குறித்து அதிமுக எம்.எல்.ஏ சி.வி. சண்முகம் கடுமையான விமர்சனம்!
01:51டெல்லியில் கனமழை: சைனிக் ஃபார்ம்ஸ் பகுதியில் வெள்ளத்தில் தவிக்கும் வாகன ஓட்டிகள்!
06:53பழங்குடியினர் வெளியேற்றத்திற்கு எதிர்ப்பு ! தேனியில் கம்யூனிஸ்ட் கட்சி வீதிப்போராட்டம் !
03:48தூத்துக்குடி பனிமய மாதா கோயில் திருவிழா நிறைவு: திரளான பக்தர்கள் தரிசனம்!
01:49நம்பர் 1 டிரெண்டிங்கில் 'தக்காளி வெற்றி கழகம்' பஸ்! யார் பாத்த வேலைடா இது?
08:28நெல் சேமிப்புக் கிடங்குகள் தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லாததை கண்டிக்கிறோம் - பிரேமலதா பேட்டி
04:38காவிரி விவகாரம் | அனைத்து கட்சி கூட்டம் மூலம் எந்த முடிவும் எட்டப்படாது ! நிர்மல் குமார் பேட்டி
03:59பட்ஜெட் என்ற பெயரில் ஏமாற்று வேலை ! எதிர்கால திட்டமே இல்லாத பட்ஜெட் ! – நயினார் நாகேந்திரன் பேட்டி