
அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைகாண 19 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்காக சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர் போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறுபவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விளையாடினர் இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ மாணவிகள் மண்டல அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது