தமிழகத்தில் ஆப்பிள் நிறுவனம் ரூ.30,000 கோடியில் மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகள் தொடங்க உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதன் மூலம் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு என்றும், 'பிராண்ட் தமிழ்நாடு' உலக அளவில் பிரபலமாகிவிட்டதாகவும் கூறினார்.