மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் ஜீவசமாதியில் மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் ஜீவசமாதியில் மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி

Published : Oct 28, 2023, 10:30 AM ISTUpdated : Oct 28, 2023, 10:31 AM IST

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள பங்காரு அடிகளார் ஜீவசமாதிக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆன்மீக குருவுமான பங்காரு அடிகளார் கடந்த 21ம் தேதி உடல் நல குறைவால் காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர், அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தற்பொழுது பங்காரு அடிகளாரின் ஜீவசமாதி கோவில் கருவறை அருகே குரு மண்டபத்தில், அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் பங்காரு அடிகளார் ஜீவசமாதிக்கு வந்து வழிபட்டு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி  பழனிசாமி ஜீவ சமாதிக்கு சென்று மரியாதை செய்து வழிபட்டார். இதனை அடுத்து கோவில் வளாகத்திற்குள் பஞ்ச தீபம் ஏற்றினார். 

இதனையடுத்து அடிகளார் இல்லம் சென்ற எடப்பாடி பழனிச்சாமி பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். எடப்பாடி வருகை முன்னிட்டு ஏராளமான அதிமுகவினர் கோவில் வளாகத்திற்குள் கூடியிருந்தனர்.

10:32என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்கப் பார்த்தார்கள்! – தொல். திருமாவளவன் அதிரடி பேட்டி!
07:41திருச்செந்தூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள்: மத்திய அமைச்சர் எல். முருகன் அதிரடி ஆய்வு!
07:18போலியோ இல்லாத தமிழகமே இலக்கு!–மதுரையில் சொட்டு மருந்து வழங்கி அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி பேட்டி!
07:38குழந்தைகளின் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய முதல்வர் விஜய்..! சென்னையில் தேசிய போலியோ முகாம் துவக்கம்!
02:57இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை கட்? தமிழக அரசு அதிரடி பிளான்! அதிர்ச்சியில் பெண்கள்!
03:26"Start Run, Stop Drugs" புதிய பாதை வகுத்த முதலமைச்சர் விஜய்.! 😎
04:183 கிலோமீட்டர் நிற்காமல் ஓடிய முதலமைச்சர் விஜய்..! இளைஞர்களுடன் சேர்ந்து தளபதி செய்த சம்பவம்.!
08:49முதல்வர் சட்டமன்றத்தை ஒரு திரைப்பட அரங்கமாக மாற்றாமல் இருக்க வேண்டும் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:13அப்பாவ அங்க தேடாதிங்க....மக்கள் மனதில் போய் தேடுங்க இருப்பேன்! முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!
02:41Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
Read more