மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் ஜீவசமாதியில் மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் ஜீவசமாதியில் மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி

Published : Oct 28, 2023, 10:30 AM ISTUpdated : Oct 28, 2023, 10:31 AM IST

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள பங்காரு அடிகளார் ஜீவசமாதிக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆன்மீக குருவுமான பங்காரு அடிகளார் கடந்த 21ம் தேதி உடல் நல குறைவால் காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர், அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தற்பொழுது பங்காரு அடிகளாரின் ஜீவசமாதி கோவில் கருவறை அருகே குரு மண்டபத்தில், அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் பங்காரு அடிகளார் ஜீவசமாதிக்கு வந்து வழிபட்டு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி  பழனிசாமி ஜீவ சமாதிக்கு சென்று மரியாதை செய்து வழிபட்டார். இதனை அடுத்து கோவில் வளாகத்திற்குள் பஞ்ச தீபம் ஏற்றினார். 

இதனையடுத்து அடிகளார் இல்லம் சென்ற எடப்பாடி பழனிச்சாமி பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். எடப்பாடி வருகை முன்னிட்டு ஏராளமான அதிமுகவினர் கோவில் வளாகத்திற்குள் கூடியிருந்தனர்.

03:33"DON’T COME HERE… GET OUT!" சட்டப்பேரவையில் பொங்கிய சபாநாயகர் உச்சக்கட்ட பரபரப்பு!
04:07"ஆதாரம் எங்கே?" - பேரவையில் எ.வ.வேலு சீற்றம்! அவை மரபை மீறும் எதிர்க்கட்சிகள்!
09:49திசைதிருப்பும் அரசியல் செய்வதை நிறுத்துங்கள் – சட்டமன்றத்தில் முதலமைச்சர் உரைக்குக் காரசார எதிர்ப்பு
10:15குறு, சிறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உடனே நடவடிக்கை தேவை! – வானதி சீனிவாசன் வலியுறுத்தல் !
03:03ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை வீசும் புயல் காற்று: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை !
04:33தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை" – சட்டமன்ற விவாதத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு
04:00பதில் சொல்ல முடியாமல் திசை திருப்பும் விஜய் ! – உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேட்டி
05:20திமுக முக்கியப் புள்ளி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு! என கே.என். நேரு கடும் தாக்கு !
05:14அரசியல் களத்தில் புயலைக் கிளப்பும் எம்பிக்கள் & அமைச்சர்கள்! அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
06:42கணக்குக் காட்டத் தவறிய காங்கிரஸ் தலைவர்! தகுதிநீக்கம் செய்த தேர்தல் ஆணையம் - அசன் மௌலானா பேட்டி
Read more