பெருங்களத்தூர் மெயின் ரோட்டில் மீண்டும் முதலை..! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்-வெளியான வீடியோ

பெருங்களத்தூர் மெயின் ரோட்டில் மீண்டும் முதலை..! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்-வெளியான வீடியோ

Published : Jan 02, 2024, 09:41 AM IST

சென்னை மழை பாதிப்பின் போது பெருங்களத்தூர் சாலையில் பெரிய அளவிலான முதலை வெளியே வந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டி ஒருவர் உயிர் தப்பிய நிலையில், மீண்டும் அதே பகுதியில் குட்டி முதலை சாலையில் நடமாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சாலையில் முதலை

சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பின் போது ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது  புறநகர் பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பியதால் பாதுகாப்பிற்காக ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக பாம்பு, பூச்சிகள் வெளியே வரும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது  சென்னை பெருங்களத்தூர்- நெற்குன்றம் சாலையில் மிகப்பெரிய அளவிலான முதலை சாலையை கடந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை காரில் இருந்து ஒருவர் படம் பிடித்துள்ளார். மேலும் அந்த முதலையை கவனிக்காமல் உணவு டெலிவரி ஊழியர் கிராஸ் செய்கிறார். அதிர்ஷடவசத்தால் அந்த ஊழியர் உயிர் தப்பித்தார். இதனை அடுத்து ஒரு சில தினங்களுக்கு பிறகு அந்த முதலை பிடிக்கப்பட்டு கிண்டி பூங்காவில் அடைக்கப்பட்டது.  

இந்தநிலையில் தற்போது மீண்டும் ஒரு குட்டி முதலை சாலையில் நடமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. 2 அடி உயரம் கொண்ட அந்த முதலை பெருங்களத்தூர் சாலையில் சுற்றி திரிந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் பரவி வரும் நிலையில், அந்த முதலையை வனத்துறையினர் மீட்டு கிண்டி பூங்காவில் அடைத்துள்ளனர். 
 

05:20திமுக முக்கியப் புள்ளி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு! என கே.என். நேரு கடும் தாக்கு !
05:14அரசியல் களத்தில் புயலைக் கிளப்பும் எம்பிக்கள் & அமைச்சர்கள்! அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
06:42கணக்குக் காட்டத் தவறிய காங்கிரஸ் தலைவர்! தகுதிநீக்கம் செய்த தேர்தல் ஆணையம் - அசன் மௌலானா பேட்டி
06:18முதல்வர் விஜய் மீது நம்பிக்கை வைத்து வாழ்த்து சொன்ன அஜித் அவர்களுக்கு நன்றி - ராஜ்மோகன் பேட்டி
02:29மதுரையை சூழ்ந்த கனமழை: வீதிகளில் வெள்ளப்பெருக்கு – நேரடிக் காட்சிகள்!
05:23தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் : அரசின் அலட்சியத்தைக் கடுமையாகச் சாடிய திருமாவளவன் !
02:28கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.க்கு மரியாதை : தவெக அமைச்சர்கள் திரண்டு நடன கலைகளுடன் மரியாதை !
03:56ஆளுங்கட்சியின் முறைகேடுகளை முறியடிப்போம்! – கடுமையாக தாக்கிப் பேசிய நயினார் நாகேந்திரன்!
08:35கான்பூரில் வெள்ளப்பெருக்கு: குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மீட்புப் பணி தீவிரம் !
09:03ஊதிய உயர்வு கோரி கொதிக்கும் தூய்மைப் பணியாளர்கள்: போராட்டக் களத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா !