Arrest : பட்டாகத்தியோடு பர்த்டே கொண்டாட்டம்.! நெருப்பு பறக்க காரில் ரேஸ்- ரவுடிக்கு மாவு கட்டு போட்ட போலீஸ்

Arrest : பட்டாகத்தியோடு பர்த்டே கொண்டாட்டம்.! நெருப்பு பறக்க காரில் ரேஸ்- ரவுடிக்கு மாவு கட்டு போட்ட போலீஸ்

Published : Jul 25, 2024, 02:48 PM ISTUpdated : Jul 25, 2024, 02:53 PM IST

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பட்டாகத்தியால் கேக் வெட்டியும்  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கத்தியை தரையில் தேய்து நெருப்பு  வரும் வகையில்  சாலையில் கார் ரேஸில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் தட்டி துக்கியுள்ளனர். 
 

பட்டா கத்தியோடு பிறந்தநாள் கொண்டாட்டம்

சட்ட விரோத செயல்களை தடுக்கும் வகையில் குற்றச்சம்பங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கண்காணித்து கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் தான் மிகப்பெரிய ரவுடி என வெளியில் தம்பட்டம் அடித்துக்கொள்ள பட்டா கத்தியோடு பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.இந்த நிலையில்   சென்னை ஈசிஆர் பனையூர் அருகே ரவுடி எழிலரசன் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

அப்போது கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்து கேக் வெட்டப்பட்டது. அப்போது மது போதையில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக கார் மற்றும் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியும், காரில் இருந்தப்படியே கத்தியை தரையில் தேய்தப்படியே சென்ற வீடியோ வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது . 

ரவுடிக்கு மாவுகட்டு

இது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்த நிலையில் ரவுடி எழிலரசன் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில்  சைதாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்டபட்ட ஆடுதொட்டி பாலம் அருகில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று (24.07.2024)   சைதாப்பேட்டை காவல்  குழுவினர் சைதாப்பேட்டை ஆடுதொட்டி பாலம் அருகில் சந்தேகப்படும்படி இருந்த 5 நபர்களை போலீசார் பிடிக்க முற்பட்டபோது, அந்த நபர்கள் ஓடவே, போலீசாரும் விரட்டி சென்று  4 நபர்களை மடக்கிப்பிடித்தனர்.

இதில்  எழிலரசன் என்பவர் பாலத்திலிருந்து கீழே விழுந்தபோது, இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பிடிபட்ட 4 நபர்களை விசாரணை செய்து சோதனை செய்ததில் அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 4 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி
Read more