
15வது ஊதிய ஒப்பந்தம், 1.9.2023 முதல் ஊதிய ஒப்பந்தம் அமலாகும். அடிப்படை சம்பளத்தில் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஆனால் 1.9.2024 முதல் நிலுவைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்து சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளிட்ட சங்கங்கள் கையழுத்திடாமல் வெளிநடப்பு செய்துள்ளோம். ஒருவருட நிலுவைத் தொகை இழப்பால் தொழிலாளர்களுக்கு சுமார் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஓய்வூதியர்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படியை வழங்க கோரினோம். அதற்கு திருப்திகரமான பதில் தரவில்லை. ஒப்பந்தத்தின் பலன் ஓய்வூதியர்களுக்கும் கிடைக்க வேண்டும்.