சென்னையில் குடிநீர், பால், மின்விநியோகம் இல்லாமல் மக்கள் அவதி; போராட்டத்தில் குதித்ததால் போக்குவரத்து பாதிப்பு

சென்னையில் குடிநீர், பால், மின்விநியோகம் இல்லாமல் மக்கள் அவதி; போராட்டத்தில் குதித்ததால் போக்குவரத்து பாதிப்பு

Published : Dec 06, 2023, 07:35 PM IST

சென்னை தண்டையார் பேட்டை அருகே 3 நாட்களாக மின் விநியோகம், குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பலபகுதிகள் மழை நீரால் சூழப்பட்டது. பல பகுதிகளில் மழைநீர் வடிந்துவிட்டாலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் தற்போது வரை மழை நீர் சூழ்ந்து இருக்கும் நிலையே நீடிக்கிறது. இதனால் அப்பகுதியில் மின்விநியோகம் செய்வதிலும் சிக்கல் நீடிக்கிறது.

அந்த வகையில் தண்டையார் பேட்டை அடுத்த காந்திநகர் பகுதியில் கடந்த 3 நாட்களாக மின்விநியோகம் செய்யப்படாததாலும், பால், குடிநீர் உள்ளிட்ட எந்தவித அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காததால் அப்பகுதி மக்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாலையில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் தற்போது வரை எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எங்களை வந்து பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?
Read more