சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் எழும்பூர் ரயில் நிலைய சாலை நீரில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் கனமழை காரணமாக மாநகரின் பல பகுதிகளில் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக சென்னை எழும்பூர் ரயில்நிலைய சாலையானது வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.