Breaking : சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் தீ விபத்து

Jun 1, 2023, 1:53 PM IST

சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், விரைந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை உயிரிழப்பு, காயம் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.