கனமழை எதிரொலி; சென்னை கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

Nov 30, 2023, 2:47 PM IST

சென்னையில் நேற்று மாலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாநகரின் பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.