சென்னை குன்றத்தூர் பகுதியில் அரசுப் பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்களை தாக்கிய நடிகை ரஞ்சனாவை காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.

சென்னை குன்றத்தூர் பகுதியில் அரசுப் பேருந்து எப்பொழுதும் போல கூட்டமாக வந்த நிலையில், அதில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் உள்ளே செல்ல இடம் இல்லாமல் படிக்கட்டுகளிலும், ஜன்னல் கம்பிகளை பற்றிக் கொண்டும் தொங்கிக் கொண்டு பயணம் செய்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த நடிகை ரஞ்சனா பேருந்தை வழி மறித்து பேருந்தின் ஓட்டுநர், நடத்துனரை கடுமையாக திட்டினார். மேலும் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை கீழே இறங்குமார் மிரட்டினார். கீழே இறங்காத மாணவர்களை ரஞ்சனா ஆவேசமாக தாக்கினார். அப்போது அவரை எதிர்த்து கேள்வி கேட்ட நபர்களிடம் நான் ஒரு காவல் அதிகாரி என்று கூறி மீண்டும் தாக்கத் தொடங்கினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில், கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள ரஞ்சனாவின் வீட்டிற்குச் சென்ற காவல் துறையினர் அவரை கைது செய்தனர். கைது செய்து வாகனத்தில் ஏற்ற முற்பட்டபோது தனது காரில் தான் வருவேன் என அடம்பிடித்தார். பின்னர் நீண்ட வாக்குவாதத்திற்கு பின் அவர் காவல்துறை வாகனத்தில் ஏறிச் சென்றார்.

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?
Read more