சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தான் குடியிருந்த வீட்டை திமுகவினர் அபகரித்துவிட்டதாக முதியவர் குற்றம்சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த முதியவர் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். அப்பகுதியிலிருந்த போலீசார் மற்றும் பொதுக்கள் அவரை மீட்டனர்.
இதுதொடர்பான வீடியோவை சமூக வலைபக்கத்தில் பதிவுசெய்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியில் தமிழகம் மெல்ல மெல்ல சட்டமற்றவர்களின் காடாக மாறி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.