கந்தர்வகோட்டை புனித செபஸ்தியார் ஆலய தை தேர் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கந்தர்வகோட்டை புனித செபஸ்தியார் ஆலய தை தேர் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Published : Feb 07, 2024, 12:05 PM IST

கந்தர்வகோட்டை அடுத்த மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய திருத்தேர் விழாவில் ஜாதி, மத, பேதங்களை கடந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மங்கனூரில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு ஜெப வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  நள்ளிரவு 12  மணியளவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்த புனித செபஸ்தியார் திருவுருவம் தாங்கிய தேரானது மேளதாள இசைகள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் முக்கிய வீதியின் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தன. 

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று புனித செபஸ்தியாரை வழிபட்டுச் சென்றனர். மேலும் திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஜாதி, மத, இன பாகுபாடு இன்றி ஏராளமானோர் பங்கேற்றனர்.

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
Read more