ஸ்ரீ வராகி அம்மன் ஆலய மயான கொள்ளை விழா; ஆயிரக்கணகான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு

ஸ்ரீ வராகி அம்மன் ஆலய மயான கொள்ளை விழா; ஆயிரக்கணகான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு

Published : Mar 11, 2024, 01:27 PM IST

ரிஷிவந்தியம் அருகே வாணாபுரத்தில் ஸ்ரீ வீரபத்ரகாளியம்மன் மற்றும் ஸ்ரீ வராகி அம்மன் கோவிலில் 18 ஆம் ஆண்டு மயான கொள்ளை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரபத்ரகாளியம்மன் ஸ்ரீ வராகி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத அமாவாசை நாளில்  மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் மயான கொள்ளை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் பக்தர்கள் மாரியம்மன், பத்தரகாலி, காட்டேரி போன்ற வேடமிட்டும், அதே போன்று தங்களது விளை நிலங்களில் அறுவடை செய்யப்பட்ட தானியங்களான கொழுக்கட்டை, சுண்டல், மணிலா உள்ளிட்ட தானியங்களை சூறைவிட்டும் வானபுரம் பகுதியில் உள்ள மயானம் வரை  சென்று தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். 

மயான வேட்டைக்கு போகும் வீரபத்ர காளி அம்மனை வேண்டி வழிபட்டனர். மேலும் மயானத்தில் சூறையிடும் தானியங்களை உட்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது. வானாபுரம் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து இந்த மயான கொள்ளையை காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். 

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
Read more