நாமக்கல் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 1 லட்சத்து 8 வடைகளால் அலங்கரிக்கப்பட்ட அனுமன் சிலையை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

மார்கழி மாதத்தில் மூலம் நட்சத்திரம் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அனுமன் ஜெயந்தியை ஒட்டி நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஒரே கல்லில் ஆன 18 அடி உயரம் கொண்ட நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு  ஒரு இலட்சத்து 8 வடைகள் மாலையாக அணிவிக்கப்பட்டு சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்ட்து. 

காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். காலை 10 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திட அனுமதிக்கப்படுவர். 

இதனை தொடர்ந்து பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களை கொண்டு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தங்க கவசம் அலங்காரமும் செய்யப்பட உள்ளது. அனுமன் ஜெயந்தியை ஒட்டி ஆஞ்சநேயர் கோவில் முழுவதும், 2 டன் வண்ண பூக்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
Read more