வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பங்காரு அடிகளாருக்கு மோட்ச தீப வழிபாடு

Oct 21, 2023, 11:14 AM IST

வேலூர்மாவட்டம், வேலூர் கோட்டையிலுள்ள ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆலய நிர்வாகம் சார்பில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மறைந்தார். அவருக்கு  நடராஜர் மண்டபத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. ஆன்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்களும், பொதுமக்களும் பங்கேற்று பங்காரு அடிகளாரின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.