வள்ளி, தெய்வானை தாயாருடன் திருத்தணியில் வீதி உலா வந்த முருக பெருமான்; பக்தர்கள் மனமுருகி வழிபாடு

வள்ளி, தெய்வானை தாயாருடன் திருத்தணியில் வீதி உலா வந்த முருக பெருமான்; பக்தர்கள் மனமுருகி வழிபாடு

Published : Jan 18, 2024, 01:11 PM IST

காணும் பொங்கலை முன்னிட்டு மலை கோவிலில் இருந்து திருத்தணி நகரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமானுக்கு மண்டபத்தில் பக்தர்கள் முன்னிலையில் பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5ம் படை கோயிலாகும். இந்த திருக்கோயிலில் காணும் பொங்கலை முன்னிட்டு வருடத்திற்கு ஒரு முறை உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் மலைக் கோயிலில் இருந்து திருத்தணி நகரத்திற்கு வீதி உலா புறப்பட்டு எழுவதற்கும் மேற்பட்ட வீதிகளில் திருத்தணி நகரத்தில் முக்கிய சந்திப்புகளில் பொதுமக்கள் வீடுகள் அருகில் சென்று முருக பக்தர்களுக்கு அருள் புரிந்தார்.

இதனைத் தொடர்ந்து சண்முக தீர்த்த குளம் அருகில் உள்ள மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் போன்ற திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சியளித்தார். சிறப்பு தீப ஆராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் முன்னிலையில் அபிஷேகங்கள் நடைபெற்றதால் திரளான பக்தர்கள் அரோகரா அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
Read more