சாமிதோப்பில் கோலாகலமாக நடைபெற்ற அய்யா வைகுண்டரின் தேர் திருவிழா; திரளான தென்மாவட்ட மக்கள் பங்கேற்பு

சாமிதோப்பில் கோலாகலமாக நடைபெற்ற அய்யா வைகுண்டரின் தேர் திருவிழா; திரளான தென்மாவட்ட மக்கள் பங்கேற்பு

Published : Jan 29, 2024, 05:34 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் தலைமைப் பதியில் தைத்திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. வாழைத்தார் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காணிக்கையாக அய்யா வழி பக்தர்கள் வழங்கி அய்யா வைகுண்டரை வழிபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பகுதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆனி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர் வாகனங்களில் வீதி உலா வந்தார். 

எட்டாம் நாள் திருவிழாவில் கலிவேட்டையும், 11வது நாள் திருவிழாவான இன்று மதியம் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அய்யா வைகுண்டர் தலைமை பதியில் இருந்து பல்லக்கு வாகனம் மூலமாக சம்பூரண தேருக்கு எழுந்தருளி ரத வீதிகள் வழியாக வலம் வந்தார். அப்போது சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த அய்யாவழி மக்கள் மற்றும் பொதுமக்கள் வாழைத்தார்கள் மற்றும் விலை பொருட்களை காணிக்கையாக செலுத்தி அய்யாவை வழிபட்டனர். இந்த தேரோட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
Read more