குலசையில் முத்தாரம்மன் சூரனை வதம் செய்த அற்புத காட்சி

Oct 6, 2022, 2:07 PM IST

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி கோவில் கடற்கரையில் இன்று அதிகாலை நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்து ஓம் காளி, ஜெய் காளி என்று முழங்கியது அனைவரிடத்திலும் பரவசத்தை ஏற்படுத்தியது.