தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணத்தில் நடைபெற்ற முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வேடமணிந்து அம்மனை வழிபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டிணம் முத்தாரம்மன் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சக்தி வாய்ந்த கோவிலாக உள்ளது. இந்த கோவிலின் முக்கிய நிகழ்வாக 10 நாள் தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக பக்தர்கள் 10 நாட்கள் விரதமிருந்து தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டி குறவன், குறத்தி, யாசகர், முருகன், விநாயகர், அனுமான் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து சுற்றுவட்டாரங்களில் யாசகம் பெறுவர்.

இவ்வாறு யாசகம் பெற்று முத்தாரம்மன் கோவிலில் 10ம் நாள் திருவிழாவின் போது கோவிலுக்கு வந்து காணிக்கையை செலுத்திவிட்டு தாங்கள் அணிந்திருந்த வேடத்தினை கடற்கரையில் கலைந்துவிட்டு சூரனை வதம் செய்யும் நிகழ்வினை காண்பர். இந்த நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு மகிழ்ந்தனர். 

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
Read more