Watch : கந்த சஷ்டி விழா! ஆறுபடை யாகசாலை பூஜையுடன் தொடக்கம்!

Oct 25, 2022, 11:10 PM IST

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள விசாக கொரடு மண்டபத்தில் யாகசாலை பூஜையுடன் , காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. 25 ஆம் தேதி முதல் துவங்கி வரும் 31ஆம் தேதி வரை ஏழு நாட்கள் கந்த சஷ்டி விழா நடைபெறும்.

விழாவில் இன்று காலை 8 மணிக்கு சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் வள்ளி, தேவ சேன சமேத சண்முகருக்கு முருகனின் பிரதிநிதியாக நம்பி பட்டருக்கு காப்பு கட்டி பின்னர் பக்தர்களுக்கு கம்பத்தடி மண்டபத்தில் காப்புகட்டுதல் நிகழ்சி நடைபெற்றது. .

இதேபோல், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பல மாதங்களுக்கு பின்னர் இன்று தங்கத்தேர் பவனி- பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கோவில் வளாகத்தில் நடைபெறும் பணிகளை அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.