அம்பாள் வீதியுலாவில் கொட்டி தீா்த்த கனமழை; 2 மணி நேரம் அம்மனுக்கு குடை பிடித்த அர்ச்சகர்

அம்பாள் வீதியுலாவில் கொட்டி தீா்த்த கனமழை; 2 மணி நேரம் அம்மனுக்கு குடை பிடித்த அர்ச்சகர்

Published : Nov 02, 2023, 12:35 PM IST

தூத்துக்குடியில் அம்மன் வீதியுலாவின் போது திடீரென மழை குறுக்கிட்டதால் சாமி வாகனத்தை பக்தர்கள் வீதியில் நிறுத்திச் சென்ற நிலையில், ஆர்ச்சகர் அம்மனுக்கு குடை பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாதசாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா கடந்த  மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவினை முன்னிட்டு காலை, இரவுகளில் சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்று வருகிறது. அதன்படி நான்காவது நாள் விழாவான நேற்று இரவு  அம்பாள் வீதியுலா நடைபெற்றது. 

வீதி உலா தொடங்கி நடைபெற்று கொண்டு இருக்கும் போது தீடீரென பலத்த மழை பெய்த காரணத்தினால்  அம்பாளை வீதி உலா அழைத்து வந்தவர்கள் நடுசாலையில் அம்பாளை வைத்து விட்டு மழைக்காக ஓரமாக ஒதுங்கி நின்றனர். இதனால் அம்பாள் மழையில் நனைந்து கொண்டு இருந்தார். 

அப்போது அவ்வழியாக வந்த கோவில் பூசாரி ஒருவர் தான் கொண்டு வந்த கொடையை கொண்டு அம்பாள் மழையில் நனையதவாறு பார்த்துக் கொண்டார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்த போதும் பூசாரி கொடையை பிடித்தவாறு நின்று கொண்டு இருந்தார். பின்னர் மழை விட்ட பின்னர் மீண்டும் அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

கொட்டும் மழையில் அம்பாள் நனையாமல் இருக்க 2மணிநேரம் பூசாரி கொடை பிடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
Read more