பழனி தண்டாயுதபானி கோவிலில் அதிகாரிகள் நள்ளிரவில் ஆய்வு

பழனி தண்டாயுதபானி கோவிலில் அதிகாரிகள் நள்ளிரவில் ஆய்வு

Published : Jan 09, 2023, 03:04 PM IST

பழனி முருகன் கோவிலில் வருகின்ற 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், சிலையின் தன்மை குறித்து அதிகாரிகள் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற 27ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சேதமடைந்த கோபுரங்கள், கோபுரத்தில் உள்ள பதுமைகள், சுவர் ஓவியங்கள் ஆகியவை சீரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. பழனி மலைக்கோவில் மூலவரான நவபாஷாண சிலைக்கு மருந்து சாத்துவது மற்றும் கருவறை சீரமைப்பு பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதி அரசர் குங்கிலியப்பன் தலைமையிலான சிலை பாதுகாப்பு கமிட்டி அமைக்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்று நள்ளிரவு பழனி மலை கோவில் கருவறை மற்றும் நவபாஷாண சிலையை சிலை பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். ஓய்வு பெற்ற நீதி அரசர் பொங்கிலியப்பன் தலைமையில் பேரூர் மற்றும் சிறவை ஆதீனங்கள், ஸ்தபதிகள், சித்தமருத்துவர்கள், அர்ச்சகர்கள், இணை ஆணையர் நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். நள்ளிரவில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாலை இணை ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!