தைப்பூச திருவிழா; பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியவர்களை மெய் சிலிர்க்க பார்த்த மக்கள்

தைப்பூச திருவிழா; பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியவர்களை மெய் சிலிர்க்க பார்த்த மக்கள்

Published : Jan 23, 2024, 01:13 PM IST

தைப் பூசத்திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தைப்பூச திருவிழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். மலையடிவாரத்தில் மயில் காவடி, மலர் காவடி, பால் காவடி என பல்வேறு காவடிகளை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் சேலம் மாவட்டம் சேந்தமங்கலத்தில் இருந்து வந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பெரிய கிரேன் வாகனத்தில் உடல் முழுவதும் கத்திகளை குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி பக்தர்கள் மலையடிவாரத்தில் கிரிவலம் வந்தனர். அந்தரத்தில் தொங்கியபடி பக்தர்கள் வருவதை ஏராளமானோர் கூடி நின்று மெய்சிலிர்க்க பார்த்தனர்.  

தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசாமி - வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி 24ம் தேதி மாலையும், தைப்பூச தேரோட்டம் 25ம் தேதி மாலையும், நடைபெற உள்ளது. தைப்பூச திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் நிர்வாகமும், திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை காவல்துறையினரும் செய்து வருகின்றனர்.

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
Read more