பரிசலில் ஆடி அசைந்து மறுகரை வந்த பண்ணாரி மாரியம்மன்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்து வரவேற்பு

பரிசலில் ஆடி அசைந்து மறுகரை வந்த பண்ணாரி மாரியம்மன்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்து வரவேற்பு

Published : Mar 15, 2024, 08:08 PM IST

சத்தியமங்கலத்தில் பண்ணாரி அம்மன் திருவீதி உலாவை முன்னிட்டு பவானி ஆற்றை பரிசலில் கடந்து சென்ற அம்மனை மறுகரையில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் வரவேற்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த, பண்ணாரியில்  பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். குண்டம் திருவிழாவையொட்டி, சப்பரத்தில் எழுந்தருளியுள்ள பண்ணாரி மாரியம்மன், சருகு மாரியம்மன் சப்பரம், கடந்த 13ம் தேதி முதல் சிக்கரசம்பாளையம், புதூர், அக்கரை நெகமம் புதூர், வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம் வழியாக இக்கரைதத்தப்பள்ளி கிராமத்தை வந்தடைந்தது. 

4வது நாளான இன்று  இக்கரைத்தத்தப்பள்ளியில் இருந்து பண்ணாரி அம்மனை அக்கிராம மக்கள் ஆற்றின் கரையில் நின்று,  பரிசல் மூலம் வழி அனுப்பி வைத்தனர். அப்போது பரிசலில் பண்ணாரி அம்மன் பவானி ஆற்றை கடந்து, மூன்று முறை தண்ணீரில் சுழன்று வட்டமடித்து, அக்கரைதத்தப்பள்ளி கிராமத்தை வந்தடைந்தது. அப்போது மறுகரையில் நின்ற ஆயிரக்கணக்கான கிராம மக்கள் பக்தி பரவசத்துடன் மேளதாளத்துடன் வரவேற்றனர். 

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
Read more