பழனி அருகே இன்று ஒரே நாளில் 6 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

பழனி அருகே இன்று ஒரே நாளில் 6 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

Published : Jun 07, 2023, 12:28 PM IST

பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் கோவிலில் இன்று ஒரே நாளில் 6000 பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சி உள்ளது. இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற மண்டு காளியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது. 15 நாட்கள் சாட்டுடன் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் முக்கிய நிகழ்வான  நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் சண்முக நதியில் இருந்து மண்டு காளியம்மன் கோவில் வரை மூன்று கிலோமீட்டர் தூரம் அலகு குத்தியும், தீர்த்த குடங்களுடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மண்டு காளியம்மன் கோவில் திருவிழா துவங்கியதில் இன்று ஒரே நாளில் கோவில் நிர்வாகமே ஆச்சரியப்படக்கூடிய வகையில் 6 ஆயிரம் பக்தர்கள் ஒரே நாளில் ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பு பணிக்காக பழனி தாலுகா காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

பக்தர்கள் 31வது ஆண்டாக கோவில் திருவிழா நடைபெறுவதால் மிகவும் பக்தி பரவசத்துடன் பூக்குழியில் இறங்கி வருகின்றனர். நாளை மறுநாள் 1008 குத்து விளக்கு பூஜைகளுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
Read more