Viral : பாலியல் குற்றச்சாட்டு: திருச்சி துறையூர் ஆசிரியை தற்கொலை!!

Viral : பாலியல் குற்றச்சாட்டு: திருச்சி துறையூர் ஆசிரியை தற்கொலை!!

Published : Sep 16, 2022, 05:21 PM IST

திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி லில்லி (வயது 32). இவர் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள நெட்டவேலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் ஆசிரியர் மோகன்தாஸ் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மாணவிகள் கொடுத்த புகாரின்பேரில் ஆசிரியர் மோகன்தாஸ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் ஆசிரியை லில்லி 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனால் ஆசிரியை லில்லி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில், மண்ணச்சநல்லூர் சீத்தாலஷ்மி நகரிலுள்ள தனது தாய் வீட்டுக்கு ஆசிரியை லில்லி நேற்று முன்தினம் சென்றுள்ளார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆசிரியை லில்லியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடலை வாங்க மறுத்த லில்லியின் கணவர் குணசேகர் தனது உறவினர்களுடன் ஸ்ரீரங்கம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, முசிறி கல்வி மாவட்ட அலுவலர் பாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனது மனைவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குணசேகரன் கூறினார். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, லில்லியின் உடலை பெற்றுக்கொண்ட அவரது உறவினர்கள் துறையூரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்தனர்.

பணத்தை கொடுங்க.. டபுளாக தாரேன்..தூத்துக்குடியில் கோடிக்கணக்கில் சுருட்டிய போலி முள்படுக்கை சாமியார்!
02:45 ஹைதராபாத்தில் வேறொரு பெண்ணுடன் உல்லாசம்; பிஆர்எஸ் தலைவரை மடக்கி பிடித்த மனைவி
26:52Watch | ஆம்ஸ்ட்ராங் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்ட காவல்துறை? / Rajaram Rtd ACP Interview
00:34Arrest : பட்டாகத்தியோடு பர்த்டே கொண்டாட்டம்.! நெருப்பு பறக்க காரில் ரேஸ்- ரவுடிக்கு மாவு கட்டு போட்ட போலீஸ்
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Seetharaman (Retired police) Interview | தென்தமிழகத்தில் சாதிய கொலைகள் தொடர்கதை ஆவது ஏன்?
Explainer | ஜெயக்குமார் மரணத்தில் காவல்துறைக்கு இருக்கும் சவால்கள் | Rajaram (Rtd ACP) Interview
02:17DMK : திண்டுக்கல்.. வெட்டி கொலை செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர்.. முன் விரோதமா? போலீசார் தீவிர விசாரணை!
14:58Coimbatore : கோவை.. இளைஞர்களை குறி வைத்து கஞ்சா & உயர் ரக போதை பொருட்கள் விற்பனை - அதிரடியாக ஐவர் கைது! Video!