மூன்றாவது திருமணத்திற்கு தயாரான இளைஞர்.. இரண்டாவது மனைவியுடன் முதல் மனைவி சேர்ந்து அடித்து துவைத்து எடுத்த காட்சிகள்..!

மூன்றாவது திருமணத்திற்கு தயாரான இளைஞர்.. இரண்டாவது மனைவியுடன் முதல் மனைவி சேர்ந்து அடித்து துவைத்து எடுத்த காட்சிகள்..!

Published : Sep 10, 2019, 01:39 PM IST

மூன்றாவது திருமணம் செய்வதற்காக திருமண வலைத்தளத்தில் விண்ணப்பித்த இளைஞர்க்கு  அவருடை இரு மனைவிகளும் சரமாரியாக அடித்து உதைத்த காட்சி வெளியாகி ஏற்படுத்தியுள்ளது.
 

கோவை மாவட்டம் சூலூர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜ் மகன் அரவிந்த தினேஷ். இவருக்கு திருமணமான 15 நாட்களிலேயே தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். 
பிரியதர்ஷினி தந்தை வீட்டிற்குச் சென்றதால் அதனை தொடர்ந்து அரவிந்த தினேஷ் திருமண வலைதளத்தில் பதிவு செய்து கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த அனுப்பிரியா என்பவரை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

முதல் மனைவியை கொடுமைப்படுத்தியது போன்றே இவரையும் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரும் தாயார் வீட்டிற்குச் சென்று விட்டார். இந்நிலையில், மூன்றாவது திருமணம் செய்வதற்காக அவர், திருமண வலைத்தளத்தில் விண்ணப்பித்துள்ளார்.

இந்த விவகாரம் இரண்டு மனைவிகளுக்கும் தெரியவரவே பிரியதர்ஷினி, அனுப்பிரியா குடும்பத்தினர் இது குறித்து அரவிந்த தினேஷிடம் விசாரிக்கையில், அவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.தொடர்ந்து பிரியதர்ஷினியும் அனுப்பிரியாவும் சேர்ந்து சூலூரில் உள்ள அரவிந்த தினேஷின் தந்தை சௌந்தர்ராஜை அழைத்துக் கொண்டு அரவிந்த தினேஷ் பணியாற்றிவரும் தொழிற்சாலைக்குச் சென்று அவரை வெளியே அனுப்பும்படி கேட்டுள்ளனர். அதற்கு நிறுவன நிர்வாகம் வெளியே அனுப்ப மறுத்ததால் இருவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர்  அரவிந்த தினேஷ், அவரது இரண்டு மனைவிகளையும் சூலூர் காவல் நிலையத்திற்கு வருமாறு கூறிவிட்டுச் சென்றனர்.அப்போது நிறுவனத்திலிருந்து வெளியேவந்த அரவிந்த தினேஷை அவரது இரு மனைவிகளும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பணத்தை கொடுங்க.. டபுளாக தாரேன்..தூத்துக்குடியில் கோடிக்கணக்கில் சுருட்டிய போலி முள்படுக்கை சாமியார்!
02:45 ஹைதராபாத்தில் வேறொரு பெண்ணுடன் உல்லாசம்; பிஆர்எஸ் தலைவரை மடக்கி பிடித்த மனைவி
26:52Watch | ஆம்ஸ்ட்ராங் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்ட காவல்துறை? / Rajaram Rtd ACP Interview
00:34Arrest : பட்டாகத்தியோடு பர்த்டே கொண்டாட்டம்.! நெருப்பு பறக்க காரில் ரேஸ்- ரவுடிக்கு மாவு கட்டு போட்ட போலீஸ்
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Seetharaman (Retired police) Interview | தென்தமிழகத்தில் சாதிய கொலைகள் தொடர்கதை ஆவது ஏன்?
Explainer | ஜெயக்குமார் மரணத்தில் காவல்துறைக்கு இருக்கும் சவால்கள் | Rajaram (Rtd ACP) Interview
02:17DMK : திண்டுக்கல்.. வெட்டி கொலை செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர்.. முன் விரோதமா? போலீசார் தீவிர விசாரணை!
14:58Coimbatore : கோவை.. இளைஞர்களை குறி வைத்து கஞ்சா & உயர் ரக போதை பொருட்கள் விற்பனை - அதிரடியாக ஐவர் கைது! Video!