லோன் தராததால் விரக்தி.. துப்பாக்கி, கத்தியுடன் வங்கிக்குள் புகுந்து கதற விட்ட நபர்..! அதிர்ச்சி சிசிடிவி

Dec 4, 2019, 1:25 PM IST

கோவை மாவட்டம்: இராமநாதபுரம் சுங்கம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் கடன் பெற்று தருவதாகக் கூறி இடைத்தரகர் குணாளன் என்பவர் வெற்றிவேலன் என்பவரிடமிருந்து 3 லட்சம் ரூபாய் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் அவர் வங்கி கடன் பெற்று தராமல் காலம் தாழ்த்திக்கொண்டே சென்றதால் ஆத்திரமடைந்த வெற்றிவேலன் துப்பாக்கி, கத்தியுடன் நேற்று வங்கிக்கு சென்று குணாளன் மீது தாக்குதல் நடத்தினார்.