Anna Serial: பரணிக்கு ஆப்பு வைத்த பாக்கியம்.. ஷண்முகம் பற்றி தெரிய வந்த உண்மைகள்! அண்ணா சீரியல் அப்டேட்!

Published : Nov 18, 2023, 07:08 PM IST
Anna Serial: பரணிக்கு ஆப்பு வைத்த பாக்கியம்.. ஷண்முகம் பற்றி தெரிய வந்த உண்மைகள்! அண்ணா சீரியல் அப்டேட்!

சுருக்கம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில், பரணி ஷண்முகத்தை வேலைக்காரனாக தனது தோழிகளுக்கு அறிமுகம் செய்து வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

அதாவது, சனியன் சௌந்தரபாண்டியிடம் பொண்ணுக்கு முறை செய்யணும் என சம்பளத்துடன் தீபாவளி போனஸ் கேட்க, அதான் கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆகிடுச்சே, இன்னுமா முறை செய்துட்டு இருக்க? போனஸ் எல்லாம் தர முடியாது. ஏன் உன் மாப்ள பிச்சை எடுக்கறானா என்று மோசமாக பேசி செல்ல சனியன் கண் கலங்கி நிற்கிறார். 

அதன் பிறகு அங்கு வந்த பாக்கியம் சனியனுக்கு பணத்தை கொடுத்து உங்க பொண்ணுங்க முறை செய்யுங்க என்று சொல்ல உங்க பொண்ணு பரணிக்கும் இது தல தீபாவளி தான் என்பதை ஞாபகப்படுத்துகிறார். மறுபக்கம் பரணி தனது தோழிகளை எப்படியாவது ஊருக்கு அனுப்பியாக வேண்டும் என திட்டம் போடுகிறாள்.

தடாலடியாக TRP-யில் கயல் - எதிர்நீச்சலை பின்னுக்கு தள்ளிய புது சீரியல்! இந்த வார டாப் 10 தொடர்களின் முழு லிஸ்ட்

பாக்கியம் பரணிக்கு தீபாவளி முறை செய்யணும் என்று சொல்ல சௌந்தரபாண்டி முத்துப்பாண்டி என இருவரும் அதெல்லாம் செய்ய முடியாது என்று மறுப்பு தெரிவிக்கின்றனர். சிவபாலன் அண்ணனுக்கு கோவில்ல அடி வாங்குனது மறந்துடுச்சு போல என்று சொல்ல முத்துப்பாண்டி சிவபாலனை அறைந்து விடுகிறான். பாக்கியம் கண்டிப்பா முறை செய்யணும் என சொல்லி விட்டு வருத்தமாக இருக்க சிவபாலன் தன்னிடம் ஒரு ஐடியா இருக்கு என சொல்கிறான். 

அடுத்து பரணி நானும் என் வீட்டு காரரும் ஹனிமூன் போறோம், நீங்க பொங்கலுக்கு வாங்க அவரை பார்க்கலாம் என்று சொல்லி கொண்டிருக்க ஷண்முகம் அப்போது அங்கு வந்து விட அவனிடம் இவர்களை பஸ் ஏற்றி விட்டு வர சொல்கிறாள். ஷண்முகம் இவர்களை காரில் அழைத்து வந்து கொண்டிருக்கும் போது பானிபூரி சாப்பிடணும் என்று அடம் பிடிக்க ஷண்முகம் இவர்களை கடைக்கு அழைத்து செல்கிறான். 

Nayanthara: மேட்சிங்... மேட்சிங் கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா! பர்த்டே ஸ்பெஷல் புகைப்படம் வைரல்

கடைக்கு போன இடத்தில ஷண்முகம் போன் பேச போன கேப்பில் ரவுடிகள் சிலர் இந்த பெண்களிடம் தப்பா பேச அவர்களை அடித்து சண்டை போட அந்த பக்கம் வரும் பாக்கியமும் சிவபாலனும் இதை பார்த்து விடுகின்றனர். வேலைக்காரன் பயங்கரமாக சண்டை போடுறான் என்று சொல்ல பாக்கியம் இவன் தான் பரணியின் புருஷன் என்ற உண்மையை உடைக்கிறாள். அதோடு தோழிகள் ஷண்முகம் தான் என் புருஷன் என பரணி வாயால் சொல்ல வைக்கிறோம் என பிளான் போடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்தாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாசத்தை உலுக்கிய துயரங்கள்; பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நடந்த சோக சம்பவங்கள்!
சந்திரகலா மீது கொலை முயற்சி; கைது செய்யப்படும் சீரியல் நடிகர் கார்த்திக்: கார்த்திகை தீபம் சீரியல் ஹைலைட்ஸ்!