சௌந்தரபாண்டிக்கு செக்மேட் வைத்த வீரா; காதலிக்க கிளம்பிய சிவபாலன் - அண்ணா சீரியல் அப்டேட்

Published : Aug 28, 2025, 07:28 PM ISTUpdated : Aug 28, 2025, 07:35 PM IST
anna serial

சுருக்கம்

Sivabalan Move to Love Track : போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வைக்க பாரதி ரத்னா என்று எல்லோரும் சமாதானம் செய்யும் நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

Sivabalan Move to Love Track : ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் அண்ணா சீரியல், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நேற்றைய எபிசோடில் வீரா சிவபாலன் சௌந்தரபாண்டி ஆகியோர் மீது போலீஸ் புகார் கொடுத்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்க இருக்கிறது என்பது பற்றி பார்க்கலாம். போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெற சொல்லி வீராவை பாரதி ரத்னா ஆகியோர் சமாதானம் செய்ய முயற்சிக்கின்றனர்.

ஆனால், வீராவோ தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். இதே போன்று வீரா கொடுத்த புகார் ரொம்பவே ஸ்டிராங்கா இருக்கு, அதனால், நீங்க கம்பி எண்ணுறதுக்கு வாய்ப்பிருக்கு என்று சௌந்திர பாண்டி வீட்டிற்கு வந்த வழக்கறிஞர் கூற, அதைக் கேட்டு சௌந்தர் பாண்டி அதிர்ச்சிஅடைகிறார். மேலும், அவராகவே இந்த கேஸை வாபஸ் வாங்க வேண்டும், இல்லையென்றால் இந்த வழக்கை நான் வாபஸ் வாங்க செய்வேன், தாலிய கழற்றி கொடுக்கிறேன் என்று சொல்ல வைத்து அதை வீடியோ எடுக்கணும் என்று சொல்கிறார்.

இதைத்தொடர்ந்து சௌந்தரபாண்டி நீ போய் வீரா கிட்ட பேசி பேச வாபஸ் வாங்க வை என்று சிவபாலனிடம் சொல்கிறார். சிவபாலன் யோசிக்க அந்த சமயத்தில் இசக்கியம் பாக்கியாவும் நீ வீராவுடன் தான் வாழ வேண்டும் என்று கூறுகின்றனர். அதற்கு சிவபாலன் வீரா மனசை மாற்றி வீட்டிற்கு அழைத்து வருவேன் என்று பாக்கியத்திற்கு சத்தியம் செய்து கொடுக்கிறான்.

சிவபாலன் தன் பூஜை முடித்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்ப சௌந்தரபாண்டி நீ எங்கடா போற அப்படின்னு கேட்க என் மனைவி வீராவை அழைத்து வரச் செல்கிறேன் என்று கூறுகிறான் அடுத்து என்ன என்று தெரிந்து கொள்ள ஜீ திரையில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் தொடர்ந்து பார்க்கவும்.

அடுத்த நாள் சிவபாலன் பூஜை எல்லாம் முடித்து பட்டையெல்லாம் போட்டுக்கொண்டு வெளியில் கிளம்ப பாக்கியம் எங்கடா கிளம்பிட்ட என்று கேட்க. நீதானே வீரா ஓட எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்னு சொன்ன. அதான் பூஜையுடன் ஆரம்பித்து லவ் பண்ண கிளம்பிட்டேன் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது
கிரிஷுக்கு வில்லியாக மாறிய விஜயா... அம்மாவிற்கு பயந்து முத்து எடுக்கும் அதிரடி முடிவு - சிறகடிக்க ஆசை அப்டேட்