
1௦௦ ரூபாய் கொடுக்கும் ஜியோ...! “ஜியோ ப்ரைம்” திட்டத்திற்கான கட்டணம் திரும்ப கொடுக்கிறது ...
ஜியோ சலுகை பற்றி அறியாதவர் யாரும் இருக்க முடியாது . இந்நிலையில் வரும் 31 ஆம் தேதியுடன் ஜியோ வழங்கும் இலவச சலுகை முடியும் தருவாயில், ஜியோவின் சேவையை தொடர்ந்து பயன்படுத்த 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என அறிவிக்கப் பட்டு இருந்தது .
அதாவது மார்ச் மாதம் முடிவதற்குள் 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தான் ஜியோ ப்ரைம் திட்டத்தை தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்நிலையில் கேஷ் பேக் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது ஜியோ.
எப்படி செயல்படுத்துவது ?
ரிலைன்ஸ் ஜியோ பிரைம் திட்டத்தை இலவசமாக பெற ஜியோ மணி எனும் செயலியை இன்ஸ்டால் செய்து, இதன் மூலம் பெறப்படும் ஒவ்வொரு ரீசார்சிலும் ரூ.50 வரை கேஷ்பேக் வழங்க உள்ளது.
உதாரணம் :
அதாவது ஜியோ பிரைம் திட்டத்திற்கு ரூ.50 கேஷ்பேக் மற்றும் ரூ.303 மற்றும் ரீசார்ஜ் செய்யும் போது இதற்கும் ரூ.50 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
சரி 1௦௦ ரூபாய் எப்படி பெறப்படுகிறது ?
ஜியோ மணி செயலியின் மூலம், மொத்தத்தில் ரூ.402க்கு(rs 99 +rs 303 ) ரீசார்ஜ் செய்யும் போது ரூ.100 கேஷ்பேக் பெறலாம்.
இவ்வாறு செய்வதால் ஜியோ பிரைம் திட்டத்திற்கு செலுத்தும் ரூ.99, கேஷ்பேக் பெயரில் நமக்கே மீண்டும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.