
ஏப்ரல் 1 முதல் டிக்கெட் முன்பதிவில் பெரிய மாற்றம்....”விக்லப்“...
வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், ரயில் டிக்கட் முன்பதிவு செய்வதில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது என ரயில்வே அமைச்சகம் தெரிவத்துள்ளது
ATAS எனப்படும் ”விக்லப்“ முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .அதன்படி,காலியாக செல்லும் ரயில்களில் உள்ள உள்ள சீட்டுக்களை நிரப்ப முடியும்.
பயன்கள் :
எந்த ரயிலில் பயணம் செய்யவேண்டுமோ அதில் முன்பதிவு செய்யும் போது, அதே வழித்தடத்தில் செல்லக் கூடிய மற்றொரு ரயிலில் சீட் காலியாக இருக்கும் தருவாயில் இந்த முறை மூலம் இடத்தை நிரப்ப முடியும்.
மேலும் பயணிகள் சரியான நேரத்தில் தாங்கள் செல்லும் இடத்தை அடைவர். அவர்களுக்கு தேவையான இருக்கைகள் மாற்று ரயில் சேவையில் கிடைப்பதால், பயணம் செய்வதில் சிரமம் இருக்காது.
முன்பதிவு செய்யும் போது மாற்று ரயில் வசதி பெறுவதற்கு, இ-டிக்கெட்டுகள் மூலமாக மட்டும் தான் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வில்கப் முறையை தேர்வு செய்யும் பயணிகளின் டிக்கெட், மற்ற பயணிகளுக்கு சார்ட் தயாரித்த பிறகே உறுதி செய்யப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.