
விஞ்ஞானம் வளர வளர, அதே வேகத்தில் நம்மை சுற்றி பல புது புது நோய்களும் வர தொடங்கிவிட்டது காய்ச்சல் வந்தாலே எந்த காய்ச்சலாக இருக்கும் என பல சந்தேகம் எழ தொடங்கி உள்ளது.
அந்த வகையில் மக்களிடையே ஒரு விதமான பயத்தை உண்டாக்கிய காய்ச்சலுக்கான நோய் கிருமிகளில் ஜிகா, டெங்கு மற்றும் சிக்கன் குனியா உள்ளிட்டவற்றை கண்டுபிடிக்க ஒரு புதிய மொபைல்ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் படி இந்த ஆப்பை பயன்படுத்தி, வெறும் 3௦ நிமிடத்தில் நோய்களில் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதாவது நோய்களை கண்டறிய பயன்படுத்தப்படும் ஒரு கருவியின் மீது , இந்த மொபைல் ஆப் ஓபன் செய்து வைத்தால் அடுத்த சில நிமிடங்களில் சோதனையின் முடிவை புகைப்படமாக அனுப்பும். அந்த புகைப் படத்தின் நிறத்தை வைத்து, எந்த நோய் நம்மை தாக்கி இருக்கிறது என்பதை உறுதி செய்ய முடியும்
இந்த அறிய கண்டுபிடிப்பை இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்கள் துணையுடன் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன .
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.