
6 லட்சம் ட்விட்டர் பக்கங்கள் அதிரடி முடக்கம்
தீவிரவாதம் அதிகரித்து வருவதால் அதனுடன் தொடர்புடையதாக கருதப்படும் சமூக வலைத்தளங்களை அதிகம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதில், பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் மட்டும், கடந்த ஒன்றரை ஆண்டுக்கால கண்காணிப்பில் இதுவரை சுமார் 6 லட்சம் பக்கங்களை முடக்கி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது, பல தீவிரவாத கும்பல், சில விரோத பிரச்சாரங்களை மக்களிடேயே பரப்ப சில சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருவதாக வந்த தகவலை அடுத்து, சந்தேகப்படும் நபர்களை ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது .
இதன் காரணமாக தீவிரவாதம் தொடர்புடைய 6 லட்சத்து 36,248 பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன என்றும் , ஐஎஸ் தொடர்புடைய 1 லட்சத்து 25,000 ட்விட்டர் பக்கங்களும், முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த தகவலை அமெரிக்காவின் சிநெட் இணையதளம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.